LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, July 4, 2019

வாக்காளர்கள் வெளிநாட்டு செல்வாக்கு பிரசாரங்களால் குறிவைக்கப்படுகின்றனர் – கனடா உளவு நிறுவனம்

வௌிநாட்டு நடிகர்கள் கனேடிய பொது மக்களிடம்
செல்வாக்கு செலுத்தவும் கனடாவின் ஜனநாயக நிறுவனங்கள் மற்றும் செயல்முறைகளில் தலையிடவும் முயல்கின்றனர் என்று சி.எஸ்.ஐ.எஸ். பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இது அச்சுறுத்தல் மிகுந்த செயற்பாடாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் கூட்டாட்சி தேர்தல் பிரச்சாரத்தில் நேரடியாக செல்வாக்கு செலுத்த முயற்சிக்கும் வெளிநாட்டு நடிகர்களை கனடாவின் உளவுத்துறை அமைப்பு அடையாளம் கண்டுள்ளதாக ரொறென்றோ ஸ்டார் மற்றும் பஸ்ஃபீட் செய்தி நிறுவனங்கள் தமது ஆய்வறிக்கைகளில் குறிப்பிட்டுள்ளன.

ஒரு கூட்டணி கட்சியின் மூத்த அரசியல் பணியாளர்கள் ஒக்டோபர் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள தேர்தலில் செல்வாக்கு செலுத்துவதற்கான “இரகசிய மற்றும் வெளிப்படையான” முயற்சிகளை மேற்கொள்வது குறித்து கனடாவின் இணைய பாதுகாப்பு நிறுவனம் மற்றும் தகவல் தொடர்பு பாதுகாப்பு நிறுவனம் என்பன விளக்கமளித்துள்ளன.

கனடாவின் உள்நாட்டு உளவு நிறுவனமான, கனேடிய பாதுகாப்பு புலனாய்வு சேவை நிறுவனம், “அச்சுறுத்தல் மிக்க நடிகர்கள்” கனேடிய குடிமக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக நேற்று கூறியிருந்தது.

இருப்பினும் அந்த நிறுவனம் தேர்தலை விட “ஜனநாயக அமைப்புகள்” மீதான தாக்குதலுடன் இந்த செயற்பாட்டை இணைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7