தாயகச் செய்திகள்
இந்தியச் செய்திகள்
கனடா செய்திகள்
உலகச் செய்திகள்
Thursday, March 4, 2021
Wednesday, February 10, 2021
மரண அறிவித்தல்
Monday, January 25, 2021
கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு -22.01.2021
(ஜெ.ஜெய்ஷிகன்)
கோறளைப்பற்று வடக்கு வாகரைப் பிரதேச செயலக நிர்வாக எல்லைக்குட்பட்ட மட்டக்களப்பு கல்குடா வலயத்தின் கீழ் உள்ள 13 பாடசாலைகளில் கல்விகற்கும் தாய் அல்லது தந்தையினை இழந்த மற்றும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் 250 மாணவர்களுக்கான எழுதுகருவி வழங்கி வைக்கும் நிகழ்வானது 22 ஐனவரி 2021 அன்று இடம்பெற்றுள்ளது.
மேற்படி நிகழ்வானது கோறளைப்பற்று வடக்கு வாகரைப் பிரதேசசெயலாளர் திரு.எஸ்.கரன் அவர்களின் வழிநடத்தலின்கீழ் உதவிப்பிரதேச செயலாளர் திருமதி.கா.அமலினி அவர்களின் இணைப்பாக்கத்தினூடாக கோட்டக்கல்வி அதிகாரி திரு.ஐயவதனன் அவர்களின் நேரடி கண்காணிப்புடன் அனுசரணையாளரான திரு.எஸ்.எம்.லோகராஐh மட்டக்களப்பு மற்றும் அவரின் மகள்மாரான கனடாவில் வசிக்கும் திருமதி.தேவப்பிரியா நிறஞ்சன் குடும்பத்தினர் மற்றும் லண்டனில வசிக்கும்; திருமதி.டீவாசினி பிரசாத் குடும்பத்தினரின் நிதிப்பங்களிப்பில் ஒரு மாணவருக்கு ரூபா 1000.00 பெறுமதியில் 250 மாணவர்களுக்கு திரு.எஸ்எம்.லோகராஐh அவர்கள் பாடசாலை மாணவர்களுக்கு அதிபர்கள் மற்றும் ஆசிரியர் முன்னிலையில் கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலகத்தின் பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் திரு.த.உமேஷ் மற்றும் சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் திரு.அ.அழகுராஐ; உடன் இணைந்து மாணவர்களுக்கு மேற்படி கற்றல் உபகரணங்கள் மற்றும் எழுது கருவிகளை வழங்கி வைத்துள்ளார்.
மட்.ககு. கதிரவெளி விக்னேஸ்வரா வித்தியாலய மாணவர்களுக்கான கற்றல் மற்றும் எழுதுகருவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு (75 மாணவர்கள் பயனாளிகளாவர்)
மட்.ககு.பால்ச்சேனை தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள்
மட்.ககு.பால்ச்சேனை தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள்
மட்.ககு.வம்மிவட்டவான் வித்தியாலய மாணவர்கள்
Sunday, January 17, 2021
'திருவாசகத்தில் சைவசித்தாந்தக் கோட்பாடு ' சிறந்த நூலாகத்தெரிவு
(க.ஜெகதீஸ்வரன்)
கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழாவை முன்னிட்டு பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட சிறந்த நூற்தேர்வில் கிழக்கு மாகாணத்தில் 2019ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நூல்களில் 'திருவாசகத்தில் சைவசித்தாந்தக் கோட்பாடு ' என்னும் நூல் ஆன்மீகம் சார் படைப்புத் துறையில் சிறந்த நூலாகத்தெரிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்றுமுன்தினம் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் குறித்த திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர்ச.நவதீன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சிறந்த நூலிற்கான காசோலை நூலின் ஆசிஜரியர்குமாரசாமி தவசீலனிற்கு வழங்கி கௌரவிக்கப்ட்டது.குறித்த நிகழ்வில் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் சிவகுமார் மற்றும் மண்முனை வடக்கு உதவிப் பிரதேச செயலாளர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
நூலாசிரியர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சைவசித்தாந்தத் துறையில் கற்று முதல் நிலை சித்தி பெற்று உதவி விரிவுரையாளராக் கடமையாற்றியவர். தனது முதுதத்துவமாணி (M.phi) கற்கையை அப்பல்கலைக்கழகத்தில் கலாநிதி விக்னேஸ்வரி பவநேசன் அவர்களின் மேற்பார்வையின் கீழ் செய்து வருகின்றார். இவர் 15 ற்கு மேற்பட்ட சர்வதேச மாநாடுகளில் பங்குபற்றி ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்திருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது. தற்போது கோறளைப்பற்று பிரதேச செயலகத்தில் பட்ட தாரிப் பயிலுனராகக் கடமையாற்றுகின்றார். தனது குரு பேராசிரியர் மா . வேதநாதன் அவர்களுக்கு அன்புக் காணிக்கையாக இந்நூலை எழுதியிருந்தார். அது கிழக்கு மாகாண விருதைப் பெற்றிருக்கிறது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் கைலாசநாதக்குருக்கள்இ பேராசிரியர் சதாசிவம் அவர்களின் ஞாபகார்த்தமாக வழங்கப்படுகின்ற விருதுகளையும் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
வாழைச்சேனை - பேத்தாழை வீரையடி விநாயகர் ஆலய பரிபாலன சபையினரால் தைப்பொங்கல் பொதி வழங்கிவைக்கும் நிகழ்வு
இந்நிகழ்வில் ஆலய நிர்வாககிகள் மற்றும் கோறளைப்பற்று பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் கே.எஸ்.ஆர்.சிவகுமார் மற்றும் இந்துகலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் நே.பிருந்தாபன் ஆகியோர் கலந்துகொண்டனர். இப்பொங்கல் பொதி வருடாவருடம் இலண்டனில் வசிக்கும் திரு.சுப்பிரமணியம் நேசராசா அவர்களின் அனுசரணையுடன் இவ்வாலய பரிபாலன சபையினரால் வழங்கிவைக்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.
