தாயகச் செய்திகள்
இந்தியச் செய்திகள்
கனடா செய்திகள்
உலகச் செய்திகள்
கட்டுரைகள்
கலை இலக்கியம்
சினிமா செய்திகள்
Monday, April 25, 2022
பாவற்கொடிச்சேனை விநாயகர் வித்தியாலயத்தில் இடம்பெற்ற தொலைக்கல்வி நிலைய திறப்பு விழா!!
Monday, March 7, 2022
இரண்டாம்மொழி பயிற்சி நிறைவும், சிறப்பு கலை நிகழ்வும்
"எனக்குள்ளே" இசை வெளியீட்டு விழாவில் கண் தானம் செய்த படக்குழுவினர்!!
இந்திய சினிமா துறைக்கு நிகராக பல்வேறுபட்ட கலைப் படைப்புகள் மட்டக்களப்பு மாவட்ட கலைஞர்களால் வெளியிடப்பட்டு வரும் நிலையில் அண்மைக்காலத்தில் மட்டக்களப்பு வர்த்தக சினிமா துறையில் பாரிய சாதனை படைத்த "சிப்ஸ் சினிமாஸ்" தயாரிப்பு நிறுவனமானது தனது இரண்டாவது படைப்பாக இம்மாதம் 19 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியிடப்படவிருக்கும் ஓர் நடுத்தர நீளத் திரைப்படமான "எனக்குள்ளே" எனும் திரைப்படத்தினை தயாரித்து வருகின்றது.
இரண்டாம் மொழி பயிற்சி நிறைவும் கலை விழாவும்
அரசாங்கத்தினால் அரச உத்தியோகத்தர்களின் மொழித்துறையை விருத்தி செய்யும்
நோக்கில் அரச மொழிகள் திணைக்களத்தினால் மொழிப்பயிற்சிகள் வழங்கப்பட்டு
வருகின்றது.
இதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச
திணைக்களங்களில் தமிழ் மொழி மூலம் கடமை புரியும் உத்தியோகத்தர்களின் சிங்கள
மொழித்துறையை விருத்தி செய்யும் நோக்கில் அரச மொழிகள் திணைக்களத்தினால்
150 மணித்தியாளம் பயிற்சியை பூர்த்தி செய்த உத்தியோகத்தர்களுக்கான
இறுதிநாள் நிகழ்வு கல்குடா கல்வி வலய கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
கல்குடா
வலயக் கல்விப் பணிப்பாளர் தினகரன் ரவி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்
பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான திருமதி.எஸ்.கங்கேஸ்வரன்,
திருமதி.ஆர்.றிஸ்மியா பானு, கணக்காளர் வி.கணேசமூர்த்தி, நிருவாக
உத்தியோகத்தர் எச்.எம்.பாறூக், தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி
நிறுவனத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.துஜோகாந், சிங்கள கற்கை நெறி
ஆசிரியர்களாக எஸ்.தனலெட்சுமி, எஸ்.திலினி, கல்வி வலய உத்தியோகத்தர்கள் எனப்
பலர் கலந்து கொண்டனர்.
கல்கு கல்வி வலயத்திற்குட்பட்ட ஆசிரியர்கள்,
அலுவலக உத்தியோகத்தர்கள், செங்கலடி பிரதேச சபை உத்தியோகத்தர்கள் ஆகியோர்
இப்பாடநெறியை பூர்த்தி செய்துள்ளதுடன், அவர்களது சிங்கள மொழியிலான கலை
நிகழ்ச்சிகளும் இடம் பெற்றது.