மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் சமூக ஊடகப் பாவனைகள் அதிகரித்து வருகின்ற இக் காலகட்டத்தில், அதனை சரியான முறையிலும், பாதுகாப்பாகவும் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வேலைத்திட்டமொன்று மட்டக்களப்பில் இயங்கிவரும் LIFT தன்னார்வ தொண்டு நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படுகின்றது.
தாயகச் செய்திகள்
இந்தியச் செய்திகள்
கனடா செய்திகள்
உலகச் செய்திகள்
கட்டுரைகள்
கலை இலக்கியம்
சினிமா செய்திகள்
Tuesday, March 14, 2023
கையில் இருப்பது சமூக ஊடகங்கள் அல்ல சமூகப் பொறுப்பு - LIFT தொண்டு நிறுவனத்தினால் விழிப்புணர்வுக் கருத்தரங்கு!!
Monday, March 13, 2023
HELVETAS நிறுவனத்தின் நிதி அனுசரணையில் Lift Ngo மனிதாபிமானத் தொண்டு நிறுவனத்தினால் பாடசாலை மாணவர்களுக்கான விழிப்புணர்வுச் செயலமர்வுகள்!!
Thursday, March 2, 2023
வாழைச்சேனை இந்து கனிஷ்ட வித்தியாலய மாணவர்கள் சதுரங்கத்தில் சாதனை
(ஜெ.ஜெய்ஷிகன்)
கடந்த 25.26.02.2023 ஆகிய திகதிகளில் இலங்கை பாடசாலைகள் சதுரங்க சங்கத்தினால் திருகோணமலை மத்திய மகா வித்தியாலயத்தில் நடாத்தப்பட்ட கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான சதுரங்கக் குழுப் போட்டியில் மட். ககு. வாழைச்சேனை இந்து கனிஷ்ட வித்தியாலயத்தின் 11 வயது ஆண்கள் குழு முதலாம் இடத்தினைப் பெற்று சாதனை படைத்துள்ளதோடு மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது.
குறித்த போட்டி நிகழ்வில் 11 வயது பெண்கள் குழு மூன்றாம் இடத்தினையும், 9 வயது ஆண்கள் குழு ஐந்தாம் இடத்தினையும் 9 வயது பெண்கள் குழு ஆறாம் இடத்தினையும் பெற்றுள்ளதோடு, நான்கு குழுக்களும் தேசியமட்டப் போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tuesday, February 21, 2023
"கலார்ப்பணா" நாட்டிய நிலையத்தின் 15 வது ஆண்டு நிறைவு விழாவும் "கலார்ப்பணம்" நூல் வெளியீடும்!!
(கல்லடி விசேட நிருபர்)
.jpg)
வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு
நிகழ்வில் முன்னால் கோட்டை கல்வி பணிப்பாளர் அ. சுகுமார் பதிவாளர் திருமதி த. பஞ்சாட்சரம் உலகலாம் நூலாசிரியர் கலாநிதி ந.பிரதீபன் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.
சிவராத்திரி தின விழிப்புணர்வு கொடி வாரம் அனுஸ்டிப்பு!!
( ஜெகதீஸ்வரன்)
மகா சிவராத்திரியை முன்னிட்டு அகில உலக இளம் சைவ மன்றத்தினால் சிவராத்திரி தின விழிப்புணர்வு கொடி வாரம் வருடந்தோறும் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இவ்வருடம் கொடி வாரத்தினை ஆரம்பித்து வைக்கும்முகமாக மட்டக்களப் பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா அவர்களுக்கு சிவராத்திரி தின விழிப்புணர்வு கொடி முதலாவதாக அணிவிக்கப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
உலக இளம் சைவ மன்றத்தின் செயலாளர் நாயகம் கலாநிதி நல்லசாமி பிரதீபன் ஐயர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் கீ.குணநாயகம்,
மன்றத்தின் பொருளாளர் பீ.ஜெயகாந்தன், மன்றத்தின் பிரதிநிதிகளான செல்வி எஸ்.சாம்பவி, செல்வி வி.நியோமிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்துள்ளனர்.
அதேவேளை இதன்போது இளம் சைவ மன்றத்தின் இலட்சனை பொறிக்கப்பட்ட நினைவுச் சின்னமும் அரசாங்க அதிபரிற்கு வழங்கிக்கப்பட்டதுடன், அனைத்து சம ய நம்பிக்கைகளை உள்ளடக்கிய "உலகெலாம்" எனும் நூலின் பிரதியினை அதன் ஆசிரியர் கலாநிதி நல்லசாமி பிரதீபன் ஐயரினால் இதன்போது மாவட்ட அரசாங்க அதிபரிற்கு வழங்கி வைத்ததுடன், மாவட்ட செயலக உயரதிகாரிகள் உள்ளிட்ட மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கும் இதன்போது கொடி அணிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.