LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

தாயகச் செய்திகள்

இந்தியச் செய்திகள்

கனடா செய்திகள்

உலகச் செய்திகள்

கட்டுரைகள்

கலை இலக்கியம்

சினிமா செய்திகள்

Saturday, January 4, 2025

கல்குடா வலயக்கல்வி அலுவலகத்தில் 'கிளீன் ஸ்ரீலங்கா' புதுவருட ஆரம்ப நிகழ்வு

(க.ஜெகதீஸ்வரன்)

புதிய ஆண்டுக்கான கடமைகளை வைபவ ரீதியாக ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று 2025.01.01ஆம் திகதி வலயக்கல்வி அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. 


வலயக்கல்விப் பணிப்பாளர்; தருமரெத்தினம் அனந்தரூபன தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கடமைகளை ஆரம்பிக்குமுகமாக காலை 8.30 மணிக்கு வலயக்கல்விப் பணிப்பாளர் தேசியகொடியை ஏற்றி வைத்ததுடன்  தேசிய கீதமும் இசைக்கப்பட்டது. 


தொடர்ந்து நாட்டுக்காக உயிர் நீத்தவர்களுக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. உத்தியோகத்தர்கள் அனைவரும் 'தூய்மையான இலங்கை' திட்டத்துடன் இணைக்கப்பட்ட உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.


அரசாங்கத்தின் புதுமையான திட்டங்களான வறுமையை தணித்தல், டிஜிட்டல் ஸ்ரீலங்கா, க்ளீன் ஸ்ரீலங்கா ஆகிய எண்ணக் கருக்களை உள்ளடக்கிய சிறப்புரையினை  வலயக்கல்விப் பணிப்பாளர் நிகழ்த்தினார்.
பின்னர் அலுவலகத்தின் பிரதான மாநாட்டு மண்டபத்தில் கல்குடா கல்வி அலுவலகத்தின் கீழுள்ள பாடசாலைகளில் 2025ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன்  எதிர்வரும் வருடங்களில் கல்வி அடைவு மட்டத்தை தேசிய மட்டத்தில் உயர்த்துவதற்கு கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் ஒன்றிணைந்து பணியாற்றுவோம் எனக் குறிப்பிட்டார். அத்துடன் புதுவருட வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.


குறித்த நிகழ்வில் பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள், கணக்காளர், நிருவாக உத்தியோகத்தர், உதவிக்கல்விப்பணிப்பாளர், ஆசிரிய ஆலோசகர்கள், உத்தியோகத்தர்கள்; உள்ளிட்ட பலர்; கலந்து கொண்டதுடன் சிற்றுண்டிகளும் பரிமாறப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 








Friday, July 19, 2024

இறாலோடையில் நடமாடும் சேவை

                                                         (ஷோபனா)

Living child development centre திட்டத்தின் ஏற்பாட்டில் திட்டத்தில் உள்ள குடும்பங்களுக்கும் பொது மக்களுக்குமான நடமாடும் சேவை ஒன்று Living christian Assembly church Eralodai மண்டபத்தில் இடம்பெற்றது. 

Living child development centre தலைமையில் இடம்பெற்ற மேற்படி நடமாடும் சேவையை  வாகரை பிரதேச செயலகத்தின் அதிகாரிகளை கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. 

குறித்த நடமாடும் சேவையில் பிறப்பு, இறப்பு, திருமணப் பதிவு,  தேசிய அடையாள அட்டைக்காக முதன் முறையாக விண்ணப்பித்தல்,  தொலைந்த அடையாள அட்டைக்காக விண்ணப்பித்தல்,  போன்ற பிரிவுகளில் மக்களுக்கு சேவைகள் வழங்கி வைக்கப்பட்டது. 

மேற்படி  நடமாடும் சேவையில் கிராம சேவை உத்தியோகத்தர்கள்,  சமாதான நீதவான்,  பதிவாளர்,  ஆகியோர் தங்களது சேவைகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.











Thursday, July 18, 2024

கல்குடா கணக்காளருக்கு பிரியாவிடை

(ஷோபனா)

கல்குடா வலயக்கல்வி அலுவலகத்தில் கணக்காளராகப் பணியாற்றி இடமாற்றம் பெற்றுச்சென்ற வி.கணேசமூர்த்திக்கான  பிரியாவிடை வைபவம் கடந்த 12.07.2024ஆம் திகதி வெள்ளிக்கிழமை  பிற்பகல் வலயக்கல்வி அலுவலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

வலயக்கல்விப் பணிப்பாளர் தருமரெத்தினம் அனந்தரூபன் தலைமைiயில் நடைபெற்ற நிகழ்வில் கல்வி அபிவிருத்திக்கான பிரதிக்கல்விப் பணிப்பாளர் என்.நேசகஜேந்திரன் , ஆசிரிய ஆலோசகர்கள், நிருவாக உத்தியோகத்தர் எஸ்.ஏ.அமீர், நிதி உதவியாளர் திருமதி.பத்மலோஜினி லிங்கேஸ்வரன், சிரேஸ்ட்ட முகாமைத்துவ உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மற்றும்  அலுவலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நிகழ்வுகளைச் சிறப்பித்திருந்தனர்.

அவர் ஆற்றிய சேவைகள் தொடர்பில் பலரும் பாராட்டி உரையாற்றினர். பிரதான நிகழ்வுகளைத் தொடர்ந்து நினைவுச்சின்னம் வழங்கப்பட்டு  வி. வி.கணேசமூர்த்தியின் ஏற்புரையுடன் நிகழ்வுகள் நிறைவுபெற்றது. 














Saturday, June 1, 2024

சித்திரை வருடப்பிறப்பை சிலாகித்து பெருமைப்படுத்திய சித்திரைச் சங்கமம்

                                                              (சோ.ஜெகதீஸ்வரன்)

கல்குடா வலயக்கல்வி அலுவலகத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் சித்திரைச் சங்கமம் கலை, கலாசார, பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகள் இன்று (01) சனிக்கிழமை காலை கும்புறுமூலையில் அமைந்துள்ள எம்.ஜே.எப் நிலையத்தில் சிறப்பாக நடைபெற்றது.

நிலையத்தின் பிரதான அரங்கில் ஆரம்ப நிகழ்வுகள் நடைபெற்றதன் பின்னர் கலை, கலாசார பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகளும் நடைபெற்றது. 

கல்குடா வலயக்கல்வி அலுவலக ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் தலைவரும் நிருவாகத்திற்கான பிரதிக்கல்விப்பணிப்பாளருமான திருமதி.அபூபக்கர் றிஸ்மியா பாணு தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வலயக்கல்விப் பணிப்பாளர் தருமரெத்தினம் அனந்தரூபன் முதன்மை அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றியதுடன் கலை, கலாசார நிகழ்வுகளில் ஆர்வத்துடன் பங்குகொண்டது உத்தியோகத்தர்களை ஊக்குவித்ததுடன் முன்மாதியாகவும் அமைந்ததாக நலன்புரிச் சங்கத்தினர் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

நிகழ்வுகளாக யானைக்கு கண் வைத்தல், மட்டை இழைத்தல், தேங்காய் துருவுதல், பொத்தலில் நீர் நிரப்புதல், சிறுவர்களுக்கான தொப்பி மாற்றுதல்,ஆண் பெண் இருபாலாருக்குமான கயிறு இழுத்தல், பாடல், ஆடல் என சுவாரஸ்யமான பல கலாசார நிகழ்வுகள் நடந்தேறியது.

குறித்த நிகழ்வில் பிரதிக்கல்விப்பணிப்பாளர்களான என்.நேசகஜேந்திரன்  மற்றும் எஸ்.தயாளசீலன், த.இதயகுமார் மற்றும் தமிழ் முஸ்லிம் உத்தியோகத்தர்கள் குடும்ப சகிதம் கலந்து கொண்டனர். தமிழ் முஸ்லிம் உத்தியோகத்தர்கள் கலை, கலாசார, விளையாட்டு நிகழ்வுகளில் ஆர்வத்துடன் கலந்து கொண்டது இன நல்லிணக்கத்திற்கு மேலும் வலுச் சேர்ப்பதாக அமைந்துள்ளது என சிரேஸ்ட்ட உத்தியோகத்தர்கள் சிலாகித்து உரையாற்றியதும் குறிப்பிடத்தக்கது.


































 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7