போர்கால அடிப்படையில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
திருச்சி விமானநிலையத்தில் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “நீர்நிலைகளை தூர்வாராமல் இருந்ததே தண்ணீர் பிரச்சினைகள் ஏற்பட காரணம்.
மேகதாதுவில் அணைக்கட்டிவிட்டால் சென்னை உட்பட தமிழகத்தின் 19 மாவட்டங்களில் தண்ணீர் பிரச்சினை ஏற்படும்.
இவ்வாறான சூழலில் விவசாயிகள் வேறு வலியின்றி ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை நிறைவேற்றும் தனியார் நிறுவனங்களிற்கு நிலங்களை விற்றுவிடுவார்கள்.
இதனை பயன்படுத்திக்கொண்டு இலட்சக்கணக்கான பணம் மத்திய அரசுக்குள்ளும் அதில் ஒரு பங்கு தனியார் நிறுவனங்களிற்கும் கிடைக்கும்“ என தெரிவித்துள்ளார்.