LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, June 13, 2019

தி.மு.க. என்னை சுமையாக நினைத்தது – ராதாரவி

தி.மு.க. என்னை சுமையாக நினைத்தமையி
னாலேயே தான் அக்கட்சியில் இருந்து வெளியேறினேன் என நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.

சேலத்தில் இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அவர், அ.தி.மு.கவில் இணைந்து கொண்டமை குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து தொடர்ந்து தெரிவித்த அவர், “தி.மு.கவில் தான் இரட்டை தலைமை உள்ளது. ஆனால் மு.க.ஸ்டாலின் தற்போது சூழ்நிலை கைதியாக இருக்கின்றார்.

அக்கட்சியின் மீது எனக்கு அதிருப்தி கிடையாது. என்னை தற்காலிகமாக நீக்கியதற்கு ஓர் அறிவிப்பினை கொடுத்திருக்கலாம்.

அ.தி.மு.கவை பொறுத்தவரையில் அது நான் பிறந்த வீடு. அம்மா என்று அழைப்பதால் அது எனக்கு தாய் வீடு.

அத்துடன் நடிகர் சங்க தேர்தலில் தி.மு.கவின் தலையீடு காணப்படுகிறது” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நடிகை நயன்தாரா பற்றிய சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்ததன் காரணமாக நடிகர் ராதாரவியை தி.மு.க. தற்காலிகமாக கட்சியில் இருந்து நீக்கியது.

இந்நிலையில், அவர் நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அ.தி.மு.க.வில் இணைந்துக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7