சை திருப்பும் முயற்சிகள் நடைபெற்றதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சோனியா காந்தி ரேபரேலி தொகுதிக்கு மூன்று நாள் சுற்று பயணம் மேற்கொண்டார்.
இதன் போதுகருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் பேசிய அவர், ”நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவுகள் முறையாக நடைபெறவில்லை. இந்த குற்றச்சாட்டு நாட்டில் உள்ள அனைத்து மக்கள் மத்தியிலும் காணப்படுகின்றது.
கடந்த சில ஆண்டுகளாக இந்திய தேர்தல் நடைமுறை மீது சந்தேகங்கள் எழுந்துள்ளன. இது ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையினை கேள்விக்குறியாக்கும் விதமாகவுள்ளது” என தெரிவித்துள்ளார்.
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான கூட்டனி அபார வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 91 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. இதில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.