தியா 5 இடங்கள் கீழிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்ரேலியாவை சேர்ந்த பொதுநல அமைப்பொன்று 2019ஆம் ஆண்டுக்கான அமைதி மிகுந்த நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
குறித்த பட்டியலானது உலக நாடுகளில் நிலவும் உள்நாட்டு பிரச்சினைகள், மக்களின் பாதுகாப்பு உள்ளிட்ட 23 காரணிகளை அடிப்படையாக கொண்டு வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி கடந்த 11 ஆண்டுகளாக முதலிடத்திலுள்ள ஐஸ்லாந்து இம்முறையும் உலகிலேயே அமைதி நிலவும் நாடாக தெரிவாகியுள்ளது.
இதனைடுத்து நியூசிலாந்து, ஆஸ்திரியா, போர்த்துக்கல், டென்மார்க் ஆகிய நாடுகள் அடுத்த 4 இடங்களை பிடித்துள்ளன.
அத்துடன் குறித்த பட்டியலின்படி இந்தியா 141 ஆவது இடத்தில் காணப்படுவதுடன், இலங்கை 72ஆவது இடத்திலும், நேபாளம் 76ஆவது இடத்திலும் காணப்படுகிறது.
மேலும் ஆப்கானிஸ்தான் உலகிலேயே அமைதி குறைந்த நாடாக குறிப்பிடப்பட்டுள்ளது.