முஸ்லிம்களுக்கு வென்னப்புவ பிரதேச சபை தடை விதித்தமை அரசியலமைப்பை மீறும் செயற்பாடு என காணாமல்போனோர் தொடர்பான பணியகத்தின் தலைவரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.
குறித்த நடவடிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டமையே அதனைவிட அதிர்ச்சியூட்டும் விடயம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டரில் பதிவிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமேல் மாகாணம் தங்கொட்டுவ வார சந்தையில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட முஸ்லிம்களுக்கு வென்னப்புவ பிரதேச சபை தடை விதித்துள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காகவே இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதேச சபைத் தலைவர் சுசந்த பெரேரா பிரதேச அரச அதிகாரிகளுக்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.