LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, February 28, 2019

உயிரிழந்த நேபாள சுற்றுலாத்துறை அமைச்சரின் உடல் தலைநகருக்கு கொண்டு வரப்பட்டது

ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த நேபாள சுற்றுலாத்துறை அமைச்சர் உட்பட 7 பேரின் சடலங்கள் இன்று தலைநகர் காத்மண்டுவுக்கு கொண்டு வரப்பட்டன.

சீரற்ற காலநிலை காரணமாக கிழக்கு நேபாள பகுதியில் பயணித்த ஹெலிகொப்டர் நேற்று (புதன்கிழமை) விபத்துக்குள்ளாகி இருந்தது. இதில் பயணித்த அனைவரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட  நிலையில், சடலங்கள் தேடப்பட்டு வந்தன.

இந்நிலையில் காத்மாண்டுவில் இருந்து சுமார் 300 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள டாப்லஜங் பகுதியில் சடலங்கள் மீட்கப்பட்டன. இதன் போது இறந்தவர்களில் சுற்றுலாத்துறை அமைச்சர் ரபீந்திர அதிகாரியின் உடலும் அடங்குவதாக மத்திய அமைச்சின் பேச்சாளர் ராம் கிருஷ்ணா தெரிவித்தார்.

நேபாளத்தின் எவரெஸ்ட் சிகரம் உட்பட உயர்ந்த மலை பகுதிகளில் ஏராளமான வான் விபத்துகள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7