LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, February 21, 2019

424 நிறுவனங்களுக்கு இராணுவத் தளபாடங்கள் தயாரிக்க இந்தியா அனுமதி

பிரதமரின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் 424 தனியார் நிறுவனங்களுக்கு இராணுவத் தளபாடங்கள் தயாரிப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இந்த நிறுவனங்கள் மூலம் தயாரிக்கப்படும் விமானங்கள் மற்றும் தளபாடங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

பெங்களூரு நகரில் ’ஏரோ இந்தியா’ எனப்படும் இந்திய விமானங்கள் தொடர்பான கண்காட்சி ஆரம்பமானது. இக்கண்காட்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 228 டோர்னியர் ரக விமானங்கள் மற்றும் ஏ.எல்.ஹெச் துருவ் போன்ற 228 விமானங்கள் ஆப்கானிஸ்தான், மொரீசியஸ், மாலத்தீவு, நேபாளம் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அத்துடன், 2014 முதல் 2018 வரையிலான 4 ஆண்டுகளில் 424 தனியார் நிறுவனங்களுக்கு இராணுவத் தளபாடங்கள் தயாரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், 6 வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் இந்தியாவில் 237 கோடி ரூபாய் முதலீட்டில் இராணுவ தளவாடங்களைத் தயாரிக்க
ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7