பா.ஜ.க அரசுக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்றுள்ள நிலையில் அசாம் மாநிலத்தில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இன்று (சனிக்கிழமை) காலை அருணாச்சல் பிரதேசத்திற்கு சென்ற மோடிக்கு கௌகாத்தி அருகே மக்கள் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். போராட்டகாரர்கள் கண்டன பதாகைகளை ஏந்தியும், கருப்பு கொடிகளை ஏந்தியும் எதிர்ப்பை வெளிபடுத்தியுள்ளனர்.
அதேபோல் கௌகாத்தி பல்கலைக்கழக மாணவர்களும் மோடிக்கு எதிரான ஆர்பாட்டங்களை நடத்தியுள்ளனர்.
அசாமில் மோடி பல்வேறு நிகழ்சிகளில் பங்கேற்கவுள்ள நிலையில் அந்த நிகழ்வுகளுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
குடியுரிமை சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கிய மோடி அரசாங்கத்துக்கு எதிராக வடக்கு, கிழக்கு மாநிலங்களில் தொடர்சியக போராட்டங்கள் இடம்பெறுகின்றன.





