LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, December 29, 2018

பாடசாலை செல்லும் மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டி வழங்கும் நிகழ்வு


பாடசாலை செல்லும் மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகளும்  வறுமை கோட்டின்கீழ் வாழும் குடும்பங்களுக்கான உலர்வுணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு தன்னாமுனையில் நடைபெற்றது
.

மட்டக்களப்பு  மெதடிஸ்த திருச்சபை ஏஞ்சல் சிறுவர் அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக  மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமை கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தையும் ,மாணவர்களின் கல்வி நடவடிக்கையினையும் மேம்படுத்தும் முகமாக பல அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது  

இதன் கீழ் தன்னாமுனை மெதடிஸ்த திருச்சபை ஏஞ்சல் சிறுவர் அபிவிருத்தி திட்டத்தின் 2018 ஆம் ஆண்டுக்கான திட்டத்தினை  சிறப்பிக்கும் வகையில்  தன்னாமுனை  பகுதியில் வாழ்கின்ற வரிய குடும்பங்களின்  வறுமையை குறைக்கும் வகையிலும்  மற்றும் மாணவர்களின்  கல்வி கற்றல் நடவடிக்கையினை மேம்படுத்தும் முகமாகவும்   உலர்வுணவு பொருட்களும் , பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு துவிச்சக்கர் வண்டிகளும் வழங்கி வைக்கப்பட்டன

மட்டக்களப்பு கோட்டமுனை மெதடிஸ்த திருச்சபையின் போதகர் டெரன்ஸ் அடிகளாரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்  பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் எம் .உதயகுமார் மற்றும் சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட முன்பள்ளி செயலாற்றுப் பணிப்பாளர்  எஸ் .சசிகரன்  ,ஆகியோர் கலந்துகொண்டு வழங்கி வைத்தனர்  

இந்நிகழ்வில் தன்னாமுனை மெதடிஸ்த திருச்சபையின் அருட் பணியாளர்கள் , மெதடிஸ்த திருச்சபையின்  ஏஞ்சல் சிறுவர் அபிவிருத்தி திட்ட பணியாளர்கள் ,மாணவர்கள் ,பயனாளிகள் என பலர் கலந்துகொண்டனர்









 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7