அந்த நிலையம் இன்று(சனிக்கிழமை) மாலை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கில் மொத்தமாக 38 ஆயிரத்து 739 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் ஆயிரத்து 528 குடும்பங்களைச் சேர்ந்த நான்காயிரத்து 906 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
இவ்வாறு இடம்பெயர்ந்தவர்கள் 19 இடைத்தங்கல் முகாம்களில் தொடர்ந்தும் தங்கவைக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்திலேயே அதிகளவான 74 ஆயிரத்து 730 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அதேபோல், முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவில் இரண்டாயிரத்து 322 குடும்பங்களைச் சேர்ந்த எழாயிரத்து 286 பேர் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், குறித்த பிரதேசத்தில் 542 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவில் ஐயாயிரத்து 285 குடும்பங்களைச் சேர்ந்த 16 ஆயிரத்து 860 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஆயிரத்து 265 குடும்பங்களைச் சேர்ந்த 807 பேர் 3 தற்காலிக முகாம்களில் தொடர்ந்தும் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அங்கு 82 வீடுகள் முழுமையாகவும் ஆயிரத்து 681 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் 331 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து நான்கு பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவில் ஆயிரத்து 719 குடும்பங்களைச் சேர்ந்த ஐயாயிரத்து 483 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அங்கு நான்கு வீடுகள் முழுமையாகவும் 73 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளன. மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவில் 439 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 271 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மன்னார் பிரதேச செயலக பிரிவில் 27 குடும்பங்களைச் சேர்ந்த 85 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நானாட்டன் பிரதேச செயலக பிரிவில் காற்றின் தாக்கத்தால் 12 குடும்பங்களைச் சேர்ந்த 56 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ். மருதங்கேணி பிரதேச செயலக பிரிவில் நான்காயிரத்து 257 குடும்பங்களைச் சேர்ந்த 12 ஆயிரத்து 642 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவில் 155 குடும்பங்களைச் சேர்ந்த 526 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.