மட்டக்களப்பு தரிசனம்
பாடசாலை ஆசிரியரியர்களின் தொழில் வான்மை விருத்திக்கான இரண்டு நாள் செயலமர்வு மட்டக்களப்பில்
நடைபெற்றது
“தரமான கல்விக்கு
தரமான ஆசிரியர்கள்: எனும் தொனிப்பொருளில் தரிசனம் விழிப்புணர்வற்ற பாடசாலை ஆசிரியர்களின் தொழில் வான்மையை விருத்தி செய்யும் நோக்கில் இரண்டு நாள் செயலமர்வு கல்லடி நொச்சிமுனை
தரிசனம் பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது
இந்த செயலமர்வுக்கான
ஆரம்ப நிகழ்வு இன்று தரிசனம் பாடசாலை பிரதான மண்டபத்தில்
நடைபெற்றது
விழிப்புணர்வற்ற மாணவர்களின் கல்வியினை மேம்படுத்தி பல பட்டதாரிகளை
வெளிக்கொண்டு வரவேண்டும் என்ற நோக்கில் தரிசனம் பாடசாலை பல கல்வி நடவடிக்கைகளை
முன்னெடுத்து வருகின்றது
இதற்கு அமைய விழிப்புணர்வற்ற
மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களின் தொழில்
வான்மையை விருத்தி செய்யும் நோக்கில் இலங்கையில்
தேர்ச்சி பெற்ற வளவாளர்களை கொண்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன
இதன் கீழ் கல்லடி நொச்சிமுனை
தரிசனம் பாடசாலை ஆசிரியர்களின் தொழில் வாண்மை
விருத்திக்கான இரண்டு நாள் பயிசிகள் நடைபெற்றது
இதற்கு அமைய மாணவர்களின் நல்லாற்றுகைக்கான உளவளத்துணை
மேம்பாடு , பயனுறுத்திதன்மையை மேம்படையச் செய்யும் நவீன கற்பித்தல் முறைகள் , ஆசிரியர்களுக்கான தலைமைத்துவ மேம்பாடு ,
வான்மைத்துவத்திற்கான பண்பு விருத்தி ,போன்ற தலைப்புக்களின் கீழ் ஆசிரியர்களுக்கு
பயிற்சிகள் நடாத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது