மட்டக்களப்பு வவுணதீவு இளைஞர்கள் தலைமையிலான
சுற்றுச்சூழல் நலன் சார்ந்த அனர்த்த அபாய குறைப்பு திட்டம் தொடர்பான தெளிவுபடுத்தும்
கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில்
நடைபெற்றது
வவுணதீவு அபிவிருத்தி நிறுவன திட்ட முகாமையாளர் திருமதி . நிலக்ஷி தவராஜா ஒழுங்கமைப்பில்
மாவட்ட அரசாங்க அதிபர் எம். உதயகுமார் தலைமையில் இந்த கலந்துரையாடல் மாவட்ட
செயலகத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்றது
மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலக
பிரிவுக்குட்பட்ட கச்சத்தீவு ,கன்னன்குடா
,கரையாக்கன்தீவு கொத்தியாபுலை ஆகிய நான்கு
கிராமங்களில் வெள்ளப்பெருக்கு , நிலம் உவராதல் , மண்ணரிப்பு ,,கிராமத்திற்குள்
வெள்ள நீர் தேங்கி நிற்றல் ,,கரையோர கண்டல் தாவரங்களின் விருத்தியை இடையூறு
செய்யும் நடவடிக்கையில் ஈடுபடுதல் போன்ற அனர்த்த குறைப்பு முகாமைத்துவத்திற்கான
செயல்முறைத்திட்டங்களை வவுணதீவு அபிவிருத்தி நிறுவன முன்னெடுத்து வருகின்றது .
இதன் கீழ் கச்சத்தீவு ,கன்னன்குடா ,கரையாக்கன்தீவு
கொத்தியாபுலை ஆகிய நான்கு கிராமங்களின் இளைஞர்
யுவதிகள் பயிற்றுவிக்கப்பட்டு இளைஞர்கள் தலைமையிலான சுற்றுச்சூழல் நலன் சார்ந்த
அனர்த்த அபாய குறைப்பு திட்டங்கள் நடைமுறைப்படுத்த பட்டுள்ளது
இது தொடர்பாக அரச அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தும் கலந்துரையாடல்
மாவட்ட அரசாங்க அதிபர் எம். உதயகுமார்
தலைமையில் மாவட்ட செயலகத்தில் நேற்று பிற்பகல்
நடைபெற்றது
மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்ற சுற்றுச்சூழல் நலன் சார்ந்த
அனர்த்த அபாய குறைப்பு திட்டம் தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வில் மாவட்ட அனர்த்த
முகாமைத்துவ திணைக்கள மாவட்ட உதவி பணிப்பாளர் எம் எ சி எம் .ரியாஸ் , மற்றும் கோகுலன் ,மாவட்ட
திட்டமிடல் பணிப்பாளர் திருமதி புண்ணியமூர்த்தி
வவுணதீவு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திருமதி . சுபா சதாகரன், கச்சத்தீவு ,கன்னன்குடா ,கரையாக்கன்தீவு
கொத்தியாபுலை ஆகிய நான்கு கிராமங்களின்
கிராம சேவையாளர்கள ,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இளைஞர் ,யுவதிகள் , வவுணதீவு அபிவிருத்தி
நிறுவன உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்