(பாண்டி)
தற்போது வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் படி மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட காத்தான்குடி மத்திய கல்லூரியில் ஐம்பதுக்கு மேற்பட்ட மாணவர்கள் சித்தி பெற்றுள்ளதாக பாடசாலை அதிபர் எஸ்.எச்.பிர்தௌஸ் தெரிவித்துள்ளார்.
தற்போது வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் படி மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட காத்தான்குடி மத்திய கல்லூரியில் ஐம்பதுக்கு மேற்பட்ட மாணவர்கள் சித்தி பெற்றுள்ளதாக பாடசாலை அதிபர் எஸ்.எச்.பிர்தௌஸ் தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் மருத்துவ துறையில் மூன்று மாணவர்களும், பொறியியல் துறையில் இரண்டு மாணவர்களும், வர்த்தகத்துறையில் பத்து மாணவர்களும், உயிரியல் தொழில்நுட்ப துறையில் நான்கு மாணவர்களும், பொறியியல் தொழில்நுட்ப துறையில் இரண்டு மாணவர்களும், அத்தோடு உயிரியல் விஞ்ஞானத் துறை மற்றும் பகுதிக விஞ்ஞானத்துறையில் மூப்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் சித்தி பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார்.
மருத்துவ துறையில் மூன்று மாணவர்களான ஏ.ஏ.அப்துல்லா மாவட்ட ரீதியில் 2வது இடமும், ஜே.ஏ.ஜுசானி மாவட்ட ரீதியில் 20வது இடமும், ஜே.ஏ.ஜாகீர் கசன் மாவட்ட ரீதியில் 23வது இடமும் பெற்று சித்தியடைந்துள்ளனர்.
அத்தோடு பொறியியல் துறையில் இரண்டு மாணவர்களான எம்.ஐ.ஏ.சம்கான் மாவட்ட ரீதியில் 27வது இடமும், எம்.அஸ்பக் அஹமட் மாவட்ட ரீதியில் 24வது இடமும் பெற்று சித்தியடைந்துள்ளனர்.
வர்த்தகத்துறையில் பத்து மாணவர்களான எம்.யூ.புர்கான் அஹமட் மூன்று 'ஏ' மாவட்ட ரீதியில் 4வது இடமும், ஐ.எப்.பசால் அஹமெட் மூன்று 'ஏ' மாவட்ட ரீதியில் 6வது இடமும், எம்.எஸ்.சுஜாத் மூன்று 'ஏ' மாவட்ட ரீதியில் 9வது இடமும், எம்.எப்.எம்.றிலா இரண்டு 'ஏ', ஒரு 'வீ' மாவட்ட ரீதியில் 22வது இடமும், எம்.என்.எம்.சுதைஸ் இரண்டு 'ஏ', ஒரு 'வீ' மாவட்ட ரீதியில் 26வது இடமும், எஸ்.அயாஸ் அகமெட் இரண்டு 'ஏ', ஒரு 'வீ' மாவட்ட ரீதியில் 31வது இடமும், எம்.என்.எம்.அல்சாரி இரண்டு 'ஏ', ஒரு 'வீ' மாவட்ட ரீதியில் 33வது இடமும், எம்.எஸ்.எம்.இஸ்பாக் இரண்டு 'ஏ', ஒரு 'சீ' மாவட்ட ரீதியில் 61வது இடமும், எஸ்.எம்.அப்கர் றகுமான் இரண்டு 'ஏ', ஒரு 'வீ' மாவட்ட ரீதியில் 67வது இடமும், ஏ.ஆர்.ஏ.ராஜு இரண்டு 'ஏ', ஒரு 'வீ' மாவட்ட ரீதியில் 78வது இடமும் பெற்று சித்தியடைந்துள்ளனர்.
மேலும் உயிரியல் தொழில்நுட்ப துறையில் நான்கு மாணவர்களான வி.எப்.ஆஸா தில்பர் மாவட்ட ரீதியில் 2வது இடமும், யூ.ஏ.எப்.முனப்பரா மாவட்ட ரீதியில் 5வது இடமும், எம்.ஜே.எப்.ஜசரா மாவட்ட ரீதியில் 22வது இடமும், எஸ்.ஏ.எப்.சிப்னா மாவட்ட ரீதியில் 32வது இடமும் பெற்று சித்தியடைந்துள்ளனர்.
பொறியியல் தொழில்நுட்ப துறையில் இரண்டு மாணவர்களான எம்.என்.யூசுப் அலி மாவட்ட ரீதியில் 18வது இடமும், எம்.யூ.எம்.றிஸ்னி மாவட்ட ரீதியில் 21வது இடமும் பெற்று சித்தியடைந்துள்ளனர்.
சித்தியடைந்து பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவர்களுக்கும், இவர்களை கற்பித்த ஆசிரியர்கள், வழிகாட்டிய ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பாடசாலை சமூகம் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்வதாக பாடசாலை அதிபர் எஸ்.எச்.பிர்தௌஸ் மேலும் தெரிவித்தார்.