LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Tuesday, December 11, 2018

யாழ்.சுன்னாகத்தில் பெற்றோல் குண்டு வீச்சு!

சுன்னாகம் பிரதேசத்தில் இயங்கி வந்த உடற்பயிற்சி நிலையம் ஒன்றின் மீது பெற்றோல் குண்டு வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுன்னாகம் கே.கே.எஸ் வீதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் பொலிஸ் நிலையத்தை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்த நிலையிலேயே இன்று (திங்கட்கிழமை) மாலை குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த வளாகத்துக்குள் புகுந்த 10 பேர் கொண்ட கும்பல், அங்கு இயங்கி வந்த உடற்பயிற்சி (ஜிம்) நிலையத்தை அடித்துச் சேதப்படுத்தியதுடன், பெற்றோல் குண்டுகளை வீசி, தீவைத்து எரித்து அடாவடியில் ஈடுபட்டுள்ளதாக அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தினால் அங்கு தீப்பிடித்ததையடுத்து, யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீயணைப்புப் படை வரவழைக்கப்பட்டு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

குறித்த சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை சம்பவ இடத்தில் பொலிஸ் நிலையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒரு தரப்பினர் இன்று காலை கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.



 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7