LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, May 14, 2020

Update: ராஜிதவை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!

குற்றப் புலனாய்வுப் பிரிவில் சரணடைந்ததைத் தொடர்ந்து முன்னாள் நாடாளமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன கைதுசெய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் ராஜித சேனாரத்னவை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதைத் தொடர்ந்து 14 நாட்களுக்கு விளக்கமறியில் வைக்கப்பட்டார்.
அந்தவகையில் எதிர்வரும் 27ஆம் திகதிவரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Update: கைதான ராஜித சேனாரத்ன நீதிமன்றிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்!

குற்றப் புலனாய்வுப் பிரிவில் சரணடைந்ததைத் தொடர்ந்து முன்னாள் நாடாளமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன கைதுசெய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் ராஜித சேனாரத்ன கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

ராஜித சேனாரத்ன CIDயில் சரணடைந்ததைத் தொடர்ந்து கைது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன குற்றப் புலனாய்வுப் பிரிவில் சரணடைந்ததைத் தொடர்ந்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அவர், இன்று (புதன்கிழமை) மாலை கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரட்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
வெள்ளை வேன் செய்தியாளர் மாநாடு தொடர்பாக அவருக்கு நீதவான் நீதிமன்றத்தில் கடந்த டிசம்பரில் வழங்கப்பட்ட பிணையை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்றைய தினம் இரத்துச் செய்தது.
இதையடுத்து, முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை நீதின்றில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதிவான் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில், ராஜித சேனாரத்ன இன்று மாலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சரணடைந்த பின்னர் அவர் சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து ராஜித்த சேனாரத்ன நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.

7Shares


 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7