![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhAOMJ9bzPQG-jENWQfLzbRFcg-pF7iH8RWx4RuCCJzsKlZ0zfv7Bs2DVrnsCF2XauXbajdqmCq0I6kq0OiYK4GedM5KQ4usBVmTuHBoqtXSiMoz1CYlM_ctLcCflni8VvO2iFn8v4RlRk/s320/thattungal.com.jpg)
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் தமிழ் நாட்டிலும் கணிசமாக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதற்கிடையே, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக உட்துறை அமைச்சகம் சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் அந்தக் குழுக்கள் பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளன.
இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்த மத்திய உட்துறை அமைச்சக குழு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
![](https://2.bp.blogspot.com/-v4HCd1A1DGQ/U1EPV63gLrI/AAAAAAAADUk/V-XfYp4NII0/s1600/comment.jpg)