LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, February 3, 2020

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் – பன்னீர் செல்வம்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க 
அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தமிழக சுகாதாரத்துறை மூலம் எடுக்கப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமது தொகுதியான போடிக்கு இன்று (திங்கட்கிழமை) விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். இதன்போது மக்கள் மத்தியில் கருத்து தெரிவித்த அவர், இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், “கிழக்காசிய நாடான சீனாவில் வைரஸ் கொரோனா ஏற்பட்டுள்ளதால் கேரளா,  தமிழ்நாடு மாநிலத்தைச் சேர்ந்த சிலர் சீனா சென்று திரும்பி வந்துள்ளார்கள். அவர்கள் மூலம் வைரஸ் பரவி உள்ளதா என்பது குறித்து தீவிரமாக பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க கேரளா,  தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்களின் சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்கள்.

கேரளா, தமிழ் நாட்டை இணைக்கும் போடி மெட்டு மலைப்பாதை மூலமாகவும்,  கம்பம்மெட்டு மலைப்பாதை மூலமாகவும் தமிழகம்,  கேரளா மாநிலங்களுக்கு தினசரி ஆயிரக்கணக்கான வர்த்தகர்கள், விவசாயிகள்,  பொதுமக்கள் சென்று வருகிறார்கள்.

அவர்களுக்கும்  கொரோனா வைரஸ் நோய் பரவாமல் இருக்க ஒருவர் ஒருவருடன் கைகுலுக்குதல்,  முகத்திற்கு முகம் நேராக பேசுதல்,  இருமல், தும்மல் வருகின்றபோது மூக்கை மூடிக் கொள்ளுதல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் எல்லையோர பகுதி மற்றும் அனைத்து பகுதிகளிலும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க,  அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தமிழக சுகாதாரத்துறை மூலம் எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7