![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgynbB7_MofsQ5fjR-Bkl5gtoVyqEwp-9-XhfQh88Ol0uZvRa0eWhdqCcDjE_Mqbs9Wqv7Zkei6kOSwk_srBww_RImVKGwRKw528ZJVFS2FtsVvSpnfftIGpnv1ewZ24JwZEegoRZS28KQ/s320/Thattunkal.com.jpg)
அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தால் இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய அவர்களை எதிர்வரும் பெப்ரவரி 5ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்காததன் ஊடாக கொலை குற்றம் புரிந்ததாக குறித்த இருவருக்கு எதிராகவும் குற்றம் சுமத்தப்பட்டு, வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
![](https://2.bp.blogspot.com/-v4HCd1A1DGQ/U1EPV63gLrI/AAAAAAAADUk/V-XfYp4NII0/s1600/comment.jpg)