LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, December 11, 2019

ஏறாவூர் சந்தை வியாபாரிகளை சந்தித்தார் முன்னாள் முதலமைச்சர்

வசதிகளின்றி தற்காலிக இடத்தில்
பல இன்னல்களுடன் வியாபாரத்தில் ஈடுபடும் சந்தை வியாபாரிகளை கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட், அவர்களின் குறை நிறைகளை கேட்டறிந்தார்.

இன்று (செவ்வாய்க்கிழமை), அவர்களை நேரில் சென்று சந்தித்து குறைநிறைகளைக் கேட்டறிந்து கொண்டதாக ஏறாவூர் சந்தை வியாபாரிகள் தெரிவித்தனர்.

கனமழையினாலும் வெள்ளத்தினாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்களில் சந்தை வியாபாரிகளும் உள்ளடங்குவதாக முன்னாள் முதலமைச்சரின் ஏறாவூர் அலுவலகம் தெரிவிக்கிறது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட சந்தை வியாபாரிகளது வர்த்தக நடவடிக்கைகள் குறித்து முன்னாள் முதலமைச்சர் சந்தை வியாபாரிகளைச் சந்தித்துக் கேட்டறிந்து கொண்டார். அத்துடன் ஏறாவூர் பொதுச் சந்தைப் புதிய கட்டிட விடயங்கள் சம்பந்தமான முன்னேற்றங்கள் பற்றியும் கருத்துப் பகிர்ந்து கொண்டார்.

எவ்வாறேனும், ஏறாவூர் நவீன சந்தைக் கட்டிடம் பூர்த்தி செய்யப்பட்டதும் ஏறாவூர் சந்தை வியாபாரிகளுக்கு விமோசனம் கிடைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7