LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, December 11, 2019

மீண்டும் குண்டு சத்தம் கேட்காத ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்புவோம்- முஸம்மில்

நாட்டில் மீண்டும் குண்டு சத்தம் கேட்காத
ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்ப வேண்மென வட.மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மில் தெரிவித்துள்ளார்.

குருநாகல் பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஏ.ஜே.எம்.முஸம்மில் மேலும் கூறியுள்ளதாவது, “உயிர்த்த ஞாயிறு தீவிரவாத தாக்குதலின் பின்னர் கொழும்பகம விஹாரையின் விஹாராதிபதி இந்தப் பிரதேசத்தில் முஸ்லிம் மக்களைப் பாதுகாத்தார்.

மேலும் நாம் அனைவரும் மனிதர்கள். அத்துடன் ஒன்றை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். யார் ஒருவர் இந்த உலகில் பிறக்கிறாரோ, அதன்போதே அவர் இறப்பையும் தன்னுடன் அழைத்து வருகிறார்.

எனவே இதனை விளங்கிக்கொண்டால் இந்த உலகில் வாழ்வது மிகவும் இலேசானது. நாம் அந்த வாழ்க்கைக்குத் தயாராக வேண்டும்.

முழு நாட்டிலும் முஸ்லிம் மக்களுக்கும் பௌத்த மக்களுக்கும் இடையில் சற்று நம்பிக்கையின்மை காணப்படுவதை நாம் மறுக்க முடியாது.

நாம் அதனை இல்லாமல் செய்ய வேண்டும். எமது மார்க்கத்திற்கு அமைய நாம் தீவிரவாதத்தை எதிர்க்கிறோம். இலங்கையில் நடந்த சம்பவத்தை உலக தீவிரவாத சதிகளாகவே நாம் காண்கிறோம். இது தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, விசேட ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை அமைத்து ஆராய்ந்து வருகிறார்.

இந்த நாட்டில் மீண்டும் குண்டு சத்தம் கேட்காத ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்ப வேண்டும். அதனை உருவாக்க எம்மால் முடியும்” என தெரிவித்துள்ளார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7