LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, November 11, 2019

அபிநந்தன் பாகிஸ்தான் வீரர்களிடம் பிடிபட்டது போன்ற உருவ பொம்மை – பழி வாங்கலா?

இந்திய விமானப் படை விமானி அபிநந்தன்
பாகிஸ்தான் வீரர்களிடம் பிடிபட்டது போன்ற உருவ பொம்மை பாகிஸ்தான் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

கேலி செய்யும் விதமாக கராச்சியில் உள்ள பாகிஸ்தான் விமான படை அருங்காட்சியகத்தில் அபிநந்தனின் உருவ பொம்மை வைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் வீரர் ஒருவர் அபிநந்தனை சிறைப்பிடித்து அழைத்து செல்வது போன்று அது வடிவமைக்கப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் விமானப் படையைச் சேர்ந்த எப்-16 ரக விமானத்தை இந்திய விமானப் படை வீரர் அபிநந்தன் மிக்-21 ரக விமானத்தைக் கொண்டு தாக்கி அழித்தார்.

இந்த நடவடிக்கையின் போது எதிர்பாராத விதமாக பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் பரசூட் மூலம் இறங்கிய விமானி அபிநந்தனை பாகிஸ்தான் இராணுவத்தினர் சிறைப்பிடித்தனர்.

அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் படையின் பிடியில் இரத்தக் காயங்களுடன் அபிநந்தன் காணப்பட்ட வீடியோவை பாகிஸ்தான் இராணுவம் வெளியிட்டது. இதில் ஜெனீவா உடன்படிக்கையை பாகிஸ்தான் மீறியுள்ளதாக கூறி இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.

அபிநந்தனை விடுவிக்க இந்தியா தூதரக ரீதியில் அனைத்து நடவடிக்கைகளையும் செய்தது. பின்னர் மார்ச் முதலாம் திகதி அட்டாரி-வாகா எல்லையில் அபிநந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டர்.

பாகிஸ்தான் வெளியிட்ட மற்றொரு காணொளியில் கையில் தேனீர் கோப்பையுடன் பாகிஸ்தான் வீரர்களிடம், “தேனீர் அருமையாக உள்ளது, நன்றி” என்று அபிநந்தன் கூறுவது போன்ற காட்சிகள் இருந்தன.

இதன் பின்னணியில் கேலி செய்யும் விதமாக குறித்த உருவ பொம்மையை பாகிஸ்தான உருவாக்கியுள்ளது.

இந்த புகைப்படத்தை பாகிஸ்தானைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் அன்வர் லோதி தனது ருவிற்றர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “அபிநந்தனின் கையில் ஒரு அருமையான தேனீரை கொடுத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து இரத்து செய்யப்பட்டதற்குப் பின்னர் பாகிஸ்தான் இந்தியாவிற்கு எதிராக தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறது. தற்போது இந்த செயல் மூலம் பாகிஸ்தான் அரசு இந்தியா மீதான காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தியிருப்பதாக சமூக வலைதளங்களில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7