LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, November 11, 2019

‘புல்புல்’ புயல் பாதிப்புகள் குறித்து மம்தாவிடம் கேட்டறிந்தார் மோடி

‘புல்புல்’ புயலால் ஏற்பட்ட பாதிப்புகள்
குறித்து மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி ருவிற்றரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள செய்தியில், “’புல்புல்’ புயல் மற்றும் கனமழையால் கிழக்கு இந்தியாவில் ஏற்பட்டுள்ள நிலைமையை ஆய்வு செய்துள்ளேன்.

புயலால் ஏற்பட்டுள்ள சூழல் பற்றி மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியிடம் பேசியுள்ளேன். தேவைப்படும் அனைத்து உதவிகளும் மத்திய அரசால் வழங்கப்படும் என உறுதியளித்துள்ளேன்” என பதிவிட்டுள்ளார்.

வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு நிலை புதிய புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ‘புல்புல்’ என பெயரிடப்பட்டது.

இதற்கிடையே, இன்று அதிகாலை 2.30 மணியளவில், ‘புல்புல்’ புயல் கடலோர மேற்கு வங்காளம் மற்றும் பங்களாதேஷை அண்டிய பகுதியில் கரையை கடந்தது. அப்போது மணிக்கு 100 முதல் 120 கி.மீ. வரை காற்று வேகமுடன் வீசியது.

பங்களாதேஷ் தலைநகர் டாக்கா உட்பட பல்வேறு பகுதிகளிலும் நேற்று முழுவதும் மழை பெய்தது. வங்காள விரிகுடாவில் இருந்து சுந்தரவன கடலோர பகுதியை நோக்கி ‘புல்புல்’ புயல் நகர்ந்து சென்று கொண்டிருக்கிறது என ப ங்களாதேஷ் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7