LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Tuesday, August 20, 2019

நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்தது சந்திரயான்-2 விண்கலம்

இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-2
விண்கலம் 28 நாள் பயணத்திற்குப் பின்னர் புவியின் சுற்றுப்பாதையிலிருந்து விலகிய, நிலவின் சுற்றுப்பாதைக்குள் இன்று (செவ்வாய்க்கிழமை) வெற்றிகரமாக நுழைந்தது.

நிலவை பற்றி ஆய்வு செய்வதற் 3,850 கிலோ எடை கொண்ட சந்திரயான்-2 விண்கலம் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ரொக்கெட் மூலம் கடந்த மாதம் 22ஆம் திகதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

புறப்பட்ட 16 நிமிடம் 24 வினாடிகளில் விண்கலத்தை ரொக்கெட் குறிப்பிட்ட இலக்கில் கொண்டு போய் சேர்த்து புவி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியது. பின்னர் பூமியை சுற்றி வந்த சந்திரயான்-2 விண்கலத்தின் சுற்றுப்பாதை படிப்படியாக அதிகரிக்கப்பட்டு கடந்த 14ம் திகதி நிலவை நோக்கி வெற்றிகரமாக திசை மாற்றப்பட்டது.

அதன்பின்னர் நிலவை நோக்கிய சந்திரயான்-2, நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்து நிலவை சுற்றி வருகின்றது. 28 நாட்கள் பயணத்திற்குப் பிறகு சந்திரயான்-2 தற்போது நிலவை நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகின்றது.

இந்த விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் செப்டம்பர் 2ம் திகதி பிரிந்து அதன் லேண்டரின் சுற்றுப்பாதையானது இரண்டு முறை மாற்றியமைக்கப்பட்டு அதன் வேகம் படிப்படியாக குறைக்கப்படும். பின்னர் செப்டம்பர் 7ம் திகதி லேண்டரை நிலவில் மெதுவாக தரையிறக்குவதற்கான பணிகளை இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7