LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Tuesday, August 20, 2019

பால் விலையை உயர்த்தாமல் மது விலையை உயர்த்துங்கள்: கி.வீரமணி

பால் விலையை உயர்த்தாமல்,
மது விலையை உயர்த்தினால் வருமானம் கூடுமென திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

திராவிடர் கழகம் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வீரமணி மேலும் கூறியுள்ளதாவது, “பால் விலையை திடீரென்று லீட்டருக்கு 6 ரூபாய் விலைக்கு உயர்த்துவதாக ஆவின் பால் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதனால் ஏழை, நடுத்தர குடும்பத்தினரே அதிகளவு பாதிப்புக்கு உள்ளாவார்கள்.

ஆகையால் பால். முட்டை ஆகியவற்றின் விலைகளை உயர்த்தி, மக்களின் அதிருப்திக்கு ஆளாகாமல் தமிழக அரசு இருக்க வேண்டும் .

எனவே மது விலையை உயர்த்தி, பால் விலையைக் குறைத்து, உற்பத்தியாளர் நலன், உரிமை, நுகர்வோர் நலன் ஆகியவற்றைப் பாதுகாக்க தமிழக அரசு முன்வர வேண்டியது அவசியம்” என  கி.வீரமணி கூறியுள்ளார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7