LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, July 4, 2019

காலம் கடத்தும் அரசியலை தமிழ் முற்போக்கு கூட்டணி முன்னெக்கின்றது – இ.தொ.கா.

50 ரூபாயைக் காட்டி காலம் கடத்தும் அரசியலை
தமிழ் முற்போக்கு கூட்டணி முன்னெடுத்துவருகின்றது என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.

எனவே, தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்ற வேண்டாம் என கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ள அவர், வழங்கிய வாக்குறுதியின் பிரகாரம் தொழிலாளர்களுக்கு 50 ரூபாய் கட்டாயம் வழங்கப்படவேண்டும் என வலியுறுத்தினார்.

கொட்டகலை சி.எல்.எப். கேட்போர் கூடத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.

அவர் தெரிவிக்கையில், “கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட திகதியிலிருந்து பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஐம்பது ரூபாய் வழங்கப்படும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் அறிவித்திருந்தார்.

அதன் பின்னர் ஏப்ரல் முதலாம் திகதி கிடைக்கும் என்றார். ஆனால் கிடைக்கவில்லை. பின்னர் மே முதலாம் திகதி என்றார். அப்போதும் கிடைக்கவில்லை.

140 ரூபாய் கேட்டவர்கள் இன்று 50 ரூபாயில் வந்து நிற்கின்றார்கள். அமைச்சரவைக் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. ஆனால், காலம் கடத்தாமல், தொழிலாளர்களை ஏமாற்றாமல் 50 ரூபாயை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். தொழிலாளர்களை ஏமாற்றுவதற்கு இடமளிக்கமாட்டோம்.

750 ரூபாய் சம்பள உயர்வை பெற்றுக்கொடுத்துவிட்டு, இதற்குமேல் பெற்றுக்கொடுக்க எவராவது நடவடிக்கை எடுத்தால் அவர்களுக்கு முழுமையான ஆதரவு வழங்கத் தயாராக இருக்கின்றோம்” என அவர் தெரிவித்தார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7