நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக பொலிஸாரின் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.‘119’ என்ற பொலிஸ் அவசர சேவை பிரிவுக்கு அழைப்பினை மேற்கொண்ட குறித்த நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
பண்டாரவளை, எல்ல நகரத்தில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வந்த கொழும்பு பொரளை குருப்பு மாவத்தையைச் சேர்ந்த 57 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை பண்டாரவளை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.





