LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, July 4, 2019

ஒரு வருடத்துக்கு முன் நிறுத்தப்பட்ட சஹ்ரானுக்கு எதிரான விசாரணை – தகவல் வெளியானது

ஏப்ரல், 21 தொடர் தற்கொலை குண்டுத்
தாக்குதல்களின் சூத்திரதாரியாக கருதப்படும் பயங்கரவாதி சஹ்ரான் குறித்த விசாரணை ஒன்று ஒரு வருடத்துக்கு முன்னர் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்தவகையில், பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் (TID) விசாரணைகள், தேசிய உளவுத் துறையின் கடிதத்தின் பிரகாரம் ஒரு வருடத்துக்கு முன்னர் நிறுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018 ஏப்ரல் 2ஆம் திகதி தேசிய உளவுத்துறை பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியதாகவும், அதில் சஹ்ரான் குறித்து முன்னெடுக்கப்படும் உளவுத் துறை நடவடிக்கைகளுக்கு, பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் பகிரங்க விசாரணைகள் பாதிப்பை ஏற்படுத்தும் எனக்கூறி அதனை நிறுத்தக் கோரிப்பட்டுள்ளது.

அதனையடுத்தே அந்த விசாரணைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன குறித்த கடிதத்தின் பிரதியை சமர்ப்பித்து மன்றுக்கு அறிவித்தார்.

அது தொடர்பாக அதே மாதம் 10 ஆம் திகதி, அப்போது சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலராக இருந்த பத்மசிறி ஜயமான்னவுக்கு பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர கடிதம் ஊடாக தெரியப்படுத்தியதாகவும், சஹ்ரானுக்கு எதிராக 2016 முதல் கிடைக்கப்பெற்றிருந்த தகவல்களை மையப்படுத்திய விசாரணைகள் அதனாலேயே தடைப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காடியுள்ளார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7