
எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சிறைக் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம், கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கும் தீர்மானத்தை ஜனாதிபதி உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்தினர்.
சுமார் 250இற்கும் அதிகமானோர் கலந்துகொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், 14 வருடங்களுக்கு முன்னர் ஹெரோயின் கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட மிப்தாரின் மனைவி சல்காவுடம் கலந்துகொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
