LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Tuesday, June 25, 2019

ஜெயலலிதா மரண விவகாரம்: ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் மேலும் நீடிப்பு

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரண விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வரும்  ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் மேலும் 4 மாதம் நீடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு முதல் இந்த ஆணையகம் விசாரணை நடத்தி வருகின்றது. எனினும்  ஆணையத்தின் கால அவகாசம் ஏற்கனவே முடிவடைந்த நிலையில்,  அவகாசம் நீடிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் நீடிக்கப்பட்ட கால அவகாசமும்  நேற்றுடன் நிறைவடைந்தமையால், தமிழக அரசு மேலும் 4 மாதம், கால  அவகாசத்தை நீடித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் என்ற பெயரில் போராட்டம் நடத்தினார். அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து அரசியல் பயணத்தை மேற்கொண்டார்.
இதன்போதே பழனிசாமியின் பணிப்புரைக்கமைய ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையகம் அமைக்கப்பட்டு, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7