LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, June 5, 2019

இன வன்முறைகளை தூண்டுபவர்களுக்கு எதிராக குற்றவியல் திருத்தச்சட்டம் – அமைச்சரவை அங்கீகாரம்!

பல்வேறு இன மக்கள் மற்றும் மதங்களுக்கு இ
டையில் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை முன்னெடுப்பதற்கும் அரச பாதுகாப்புக்கு தடை ஏற்படும் வகையில் வைராக்கிய கூற்றுகளை தெரிவிக்கும் நபர்கள் தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளக்கூடிய வகையில் நிலையான புதிய சட்டம் உருவாக்கப்பட உள்ளது.

அந்தவகையில் குற்றவியல் தண்டனை சட்டம் நீதி குறியீடுகள் குற்றச்செயல் வழக்கு கட்டளை குறியீடுகளில் திருத்தத்தை மேற்கொள்ளுமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான பிரிவு, நீதி, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

இதற்கமைவாக இந்த குற்ற சம்பவம் தொடர்பில் குற்றவாளியான நபர் ஒருவருக்கு தண்டப்பணம் அல்லது சிறைதண்டனை விதிக்கக் கூடிய வகையில்  குற்றவியல் திருத்த சட்டம் மற்றும் குற்ற வழக்கு ஒழுங்கு விதிகள் திருத்தத்தை மேற்கொள்வதற்காக சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படவுள்ளது.

அந்தவகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7