
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஜப்பான் பிரதமரின் விசேட ஆலோசகர் பேராசிரியர் ஹரொதொ ஹசுமிக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று (வெள்ளிக்கிழமை) அலரிமாளிகையில் இடம்பெற்றது. இதன்போதே இந்த இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.
ஜப்பான் வரலாற்று நகரமான கியோதோ நகரத்தின் பாரம்பரிய உரிமைகளை பாதுகாத்து நவீன மயப்படுத்தியதுபோன்று வரலாற்று சிறப்புமிக்க கண்டி பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்கு ஜப்பானின் உதவியை இலங்கை பெற்றுக்கொள்ளவுள்ளது.
இதனிடையே, இலங்கைக்கு நட்பு ரீதியான உதவிகளை வழங்குவதற்காக ஜப்பான் அரசாங்கம் தயாராகவுள்ளதாகவும் திருகோணமலை துறைமுகத்தின் அபிவிருத்தி பணிகளுக்கென நூறு கோடி யென் நிதி உதவியை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஹரொதொ ஹசுமி தெரிவித்துள்ளார்.
இதேவேளை சமூக, பொருளதார மற்றும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் இந்து சமுத்திரத்தில் கப்பல் போக்குவரத்தின் சுதந்திரம் மற்றும் சமாதானத்தை நிலைநாட்டுவது தொடர்பாகவும் இரு தரப்புக்குமிடையில் கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
