ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார்.
சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, இந்தியா உள்பட 8 நாடுகள் உறுப்பினராக உள்ள ஷங்காய் ஒத்துழைப்பு மாநாடு இரண்டு நாட்களாக கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகர் பிஷ்கேக் நகரில் நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி கிர்கிஷ்தான் சென்றுள்ளார். இந்த மாநாட்டின் இடையே ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு இடையே இருதரப்பு உயர் மட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதன்போது பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்தும் இரு தலைவர்களும் பேசிக்கொண்டதாக தெரிகிறது.
குறிப்பாக உத்தரபிரதேசத்தில் விரைவில் ரஷ்யா துப்பாக்கி தொழிற்சாலை ஒன்றை அமைக்க உள்ளது தொடர்பாக பேசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் இதற்காக புதினிடம் பிரதமர் மோடி நன்றி தெரிவித்துக்கொண்டார்.
முன்னதாக பிரதமர் மோடி சீன அதிபர் ஜி ஜின் பிங்கையும் சந்தித்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.