ர் நகரில் 2019 ஆம் ஆண்டுக்கான சர்வதேச பெண்கள் மாநாடு இடம்பெற்று வருகின்றது. பெண்கள் மற்றும் சிறுமியர் நல்வாழ்வு, சுகாதாரம், பால்நிலை, சமத்துவம், உரிமை குறித்து பெண்கள் மாநாட்டில் ஆராயப்படுகின்றது. குறித்த மாநாட்டில் 160 நாடுகளை சேர்ந்த 8,000 உறுப்பினர்கள் பங்கேற்கின்றுள்ளனர்.
அதேவேளை குறித்த பெண்கள் மாநாட்டில் சுமார் ஒரு லட்சம் பேர் வரை பார்வையாளர்களாக கலந்துகொண்டுள்ளதாக கணிப்பிடப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை ஆரம்பமான பெண்கள் மாநாடு நாளை(வியாழக்கிழமை) நிறைவடைகின்றது.
இந்த மாநாட்டில் பெண்கள் உரிமை செயற்பாட்டாளர்கள், உலகத்தலைவர்கள், வழக்கறிஞர்கள், கல்விமான்கள், யுவதிகள், ஊடகவியலாளர்கள், அறிவுசார் குழுக்கள், பெண்கள் உரிமை அமைப்புக்கள் உட்பட பலர் கலந்துக்கொள்கின்றனர்.
கனடாவின் பெண்கள் மற்றும் பால்நிலை சமத்துவத்திற்கான அமைச்சர் மரியம் மொன்செவ் 20 நட்பு நாடுகளை சேர்ந்த அமைச்சர்களுடன் இணைந்து அமைச்சர்கள் மட்டத்திலான கூட்டத்தை நடத்துகிறார்.
இதில் தேசியத் தலைவர்களும் யுவதிகளும் பங்கேற்கின்றனர். பால்நிலை சமத்துவம், சுதேசிய மக்கள், அங்கவீனம்முற்றவர்கள், ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் , சமூக அகதிகள், பின்தங்கிய நாடுகளில் வசிக்கும் மக்கள் என பலதரப்பட்ட பெண்கள் சிறுமியர் பற்றிய பிரச்சினைகள் இங்கு ஆராயப்படுகின்றன.
பாலியல், இனப்பெருக்க சுகாதாரம், பால்நிலை ரீதியிலான வன்முறை, பெண்கள் நல பொருளாதார உரிமை, சமாதானம் மற்றும் நல்லிணக்கம் பற்றி இப்பெண்கள் மாநாட்டில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. கனடா அமைச்சர் மொன்செவ், பெண்கள் பற்றிய 21 புதிய திட்டங்களை இந்த மாநாட்டில் அறிவித்துள்ளார்.






