57 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
உலகத் தமிழர் பண்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் தெல்லிப்பழை பொது நூலக கேட்போர் கூடத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்நிகழ்வு இடம்பெற்றது.
இதில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகம் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உதவிப் பொருட்களை மாணவர்களுக்கு வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் தெல்லிப்பழை பிரதேச செயலர், உலகத் தமிழக பண்பாட்டு மையத்தின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள், வலிவடக்கு பிரதேச சபையின் தவிசாளர் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.