Vick Avenue பகுதியில் நேற்றிரவு(சனிக்கிழமை) இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கி பிரயோகத்தில் 19 மற்றும் 20 வயதான இரண்டு இளைஞர்களே படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
குறித்த துப்பாக்கி பிரயோகத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இதுவரையில் அடையாளம் காணப்படாத நிலையில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
