LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, June 26, 2019

வவுனியாவில் காணாமல்போன இரு சகோதரர்கள் கண்டுபிடிப்பு!

நெடுங்கேணி, நையினாமடு பகுதியிலிருந்து நீதிமன்ற வழக்கு விசாரணைகளுக்காக வவுனியா சென்ற இரு சகோதரர்கள் காணாமல் போயிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள், இன்று (புதன்கிழமை) முற்பகல் 11மணியளவில் முல்லைத்தீவு, முள்ளியவளைப் பகுதியிலிருந்து பூசகர் ஒருவரால் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இரு சகோதரர்களும் நீதிமன்ற வழக்கு ஒன்றிற்காக பேருந்தில் நெடுங்கேணியிலிருந்து வவுனியா சென்றபோது காணாமல் போனதாக தந்தையினால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் கடந்த சனிக்கிழமை முறைப்பாடு வழங்கப்பட்டது.

இந்நிலையில் இவ்விரு சகோதரர்களும் கடந்த 7 நாட்களாக முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியிலுள்ள பூசகர் ஒருவருடன் வசித்து வந்துள்ளனர். இதனிடையே இன்று சட்டத்தரணியூடாக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்ட இவர்கள், தமது வழக்கு விசாரணைகளுக்கு பயந்தே விசாரணைக்குச் செல்லாமல் ஓடி ஒழிந்து கொண்டதாக ஆரம்ப விசாரணைகளின்போது தெரியவந்துள்ளதாக தந்தையான விஜயசுந்தர் தெரிவித்துள்ளார்

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7