
இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில், பயங்கரவாதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இடம்பெற்றுள்ளது.
புத்காம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறைக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து, மத்திய ரிசர்வ் பொலிஸார் அங்கு தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், குறித்த பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பொலிஸாரை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து இதற்கு பதிலடிகொடுக்கும் வகையில் பொலிஸார் நடத்திய தாக்குதலில் குறித்த பயங்கரவாதி உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை குறித்த பகுதியில் மேலும் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
