LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, June 3, 2019

மும்மொழித்திட்டம் தமிழர்களை உரசிப்பார்க்க வேண்டாம்: தி.மு.க. எச்சரிக்கை

மும்மொழித்திட்டத்தை திணிப்பதன் மூலம் தமிழர்களை உரசிப்பார்க்க வேண்டாம் என மத்திய அரசுக்கு தி.மு.க. எச்ச
ரிக்கை விடுத்துள்ளது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (திங்கட்கிழமை)  இடம்பெற்ற தி.மு.க. செயற்குழுக்கூட்டத்தில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தியா முழுவதும் தற்போது காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட கல்வி கொள்கை அமுலில் உள்ளது. தமிழகத்தில் இருமொழிக் கொள்கை கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்நிலையில் மத்திய அரசு சார்பில் மும்மொழித்திட்டத்திற்கான புதிய கல்வி கொள்கை குறித்து ஆராய குழு ஒன்று நியமிக்கப்பட்டது.

இது குறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் இன்று நடைபெற்ற திமுக செயற்குழுவில் மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த அறிக்கையில், ”ஜவஹர்லால் நேரு, அறிஞர் அண்ணா, கருணாநிதி போன்றோர் கொண்டு வந்த இருமொழிக் கொள்கை மற்றும் மொழிவாரி மாநிலங்கள், கூட்டாட்சி தத்துவம் ஆகியவற்றிற்கு எதிராக மத்தியில் மோடி அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் புதிய கல்வி கொள்கை குறித்த ஆய்வு செய்வதற்கான குழு, ஹிந்தியை திணிக்கும் மும்மொழித்திட்டத்தை பரிந்துரை செய்து மத்திய அரசிடம் வழங்கியது.

இதன் தொடர்ச்சியாக ஹிந்தி கட்டாய மொழியாக்கப்படும் என்று தகவல் வெளியாகி, பல்வேறு மாநிலங்களில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து மத்திய அரசு அனைத்து மாநிலங்களுடனும் கலந்து ஆலோசித்து சுமூக தீர்வு வழங்கப்படும் என உறுதி அளித்தது.

இது தமிழர்களை உரசிப்பார்க்கும் செயலாகும். பன்மொழி பண்பாடு இருக்கும் நாட்டில் மக்கள் கருத்துக்களை அறியாமல் மத்திய அரசு முடிவெடுக்காது என நம்புகிறோம்.

தமிழர்களின் உணர்வோடு விளையாட வேண்டாம் என பா.ஜ.க.வை கேட்டுக் கொள்வதோடு, இரு மொழிக் கொள்கைக்கு ஆபத்து விளைவிக்கும் எந்த செயலானாலும் திமுக முன்னின்று எதிர்க்கும் என்பதையும் இக்கூட்டம் உறுதியாக தெரிவித்துக் கொள்கிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, மத்திய அரசின் திருத்தப்பட்ட புதிய வரைவு திட்டத்தின்படி தமிழ்நாடு உட்பட ஹிந்தி பேசாத மாநிலங்களில் மூன்றாவது மொழியாக ஹிந்தியை கட்டாயமாக கற்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரைவு திட்டத்தில் செய்யப்பட்டுள்ள அந்த முக்கிய மாற்றங்கள் தற்போது இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இதன் மூலம் ஹிந்தி கட்டாயம் என்ற பரிந்துரை நீக்கப்பட்டுள்ளது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7