LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, June 28, 2019

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரிய வழக்கு ஒத்திவைப்பு

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கோரி வேதாந்த
நிறுவனம் தொடர்ந்த வழக்கின் விசாரணை, வரும் ஜூலை 4ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த வழக்கு மீதான விசாரணை இன்று (வெள்ளிக்கிழமை) சென்னை உயர் நீதிமன்றத்தில் இடம்பெற்றது.

இதன்போது, மாசு ஏற்படுத்தியதற்கு எந்த ஆதாரங்களும் இல்லாத நிலையில் ஆலையை மூட உத்தரவிட முடியாது எனவும், மாசு ஏற்படுத்தியிருந்தாலும் அதற்கு ஆலையை மூடுவது தீர்வாகாது எனவும் வேதாந்தா தரப்பினர் தமது வாதங்களை நீதிமன்றத்தில் எடுத்துரைத்தனர்.

அத்துடன், தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் 67 ஆலைகள் இருக்கும்போது ஸ்டெர்லைட் மீது மட்டும் நடவடிக்கை எதற்காக எனவும் கேள்வியெழுப்பினர். இதையடுத்து இவ்வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டது.

தூத்துக்குடியில் உள்ள வேதாந்தா நிறுவனத்திற்குச் சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்தாண்டு மக்கள் நடத்திய போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. அப்போது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஆலையை மூட தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. ஆலையும் சீல் வைத்து மூடப்பட்டது.

இதனிடையே ஆலைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.

இதனிடையே, உயர் நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடியதன் பின்னணியில் சீன நிறுவனத்தின் சதி உள்ளதாகவும், ஒரே நேரத்தில் எப்படி 20,000 பேர் கூடினார்கள் எனத் தெரியவில்லை என்றும் போராட்டத்தை தூண்டியதும், போராட்டக்காரர்களுக்கு நிதியுதவி வழங்கியதும் சீன நிறுவனமே எனவும் வேதாந்தா நிறுவனம் குற்றஞ்சாட்டியமை குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7