பொலிஸாரின் அவசரத் தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த தகவலை அடுத்து அந்த மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மாபெல்லா (Marbella) நகரத்திலுள்ள ஒரு வீட்டின் கீழ்த்தளத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த பெண்கள், பல்வேறு விதமான சித்திரவதைகளையும் மிரட்டல்களையும் பல மணி நேரம் எதிர்கொண்டதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
அவர்களைப் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய பாதாளக் குழுக்களைச் சேர்ந்த 21 பேரை ஸ்பெயின் பொலிஸ் அதிகாரிகள் கைதுசெய்தனர்.
போர்த்துக்கலைச் சேர்ந்த சிலரின் தலைமையின் கீழ் இயங்கும் அந்தக்கும்பல், போதைப்பொருள் வர்த்தகத்திலும் தொடர்புப்பட்டுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.