பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தினை விட்டு வெளியேறும் திகதியானது ஒக்ரோபர் 31 ஆம் திகதி என திட்டமிடப்பட்டிருப்பது ஒரு கடுமையான நெருக்கடி என்று கொன்சர்வேற்றிவ் தலைமைப் போட்டியாளர் ஆன்ட்ரியா லீட்சம் தெரிவித்துள்ளார்.
மேலும் இவ்வாறான ஒரு நெருக்கடிநிலை பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஏற்படுவதுண்டு என்றும் அவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற முன்னாள் தலைவர் ஒருவர் கூறுகையில்; ஆன்ட்ரியா லீட்சம் பிரெக்ஸிற்றினை எவ்வாறாயினும் மேற்கொள்வார் என்றும் பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்தினை விட்டு வெளியேறுவதை பாராளுமன்றினால் தடுத்து நிறுத்த முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் மற்றோரு தலைமைப் போட்டியாளரான மார்க் கார்ப்பர் கூறுகையில்; ஒக்ரோபர் 31 ஆம் திகதி பிரித்தானியா வெளியேறுவது சாத்தியமில்லை என்று தெரிவித்துள்ளார்.
பிரெக்ஸிற் விவகாரத்தினை அச்சுறுத்தல்கள் மூலம் தீர்க்க்கமுடியாது என்று போட்டியாளர்களில் ஒருவரான மற் ஹன்கொக் கூறியுள்ளார்.
இதுவரையில் கொன்சர்வேற்றிவ் தலைமைப் போட்டிக்கு 10 போட்டியாளர்கள் போட்டியிடுகின்றனர். முன்னர் 13 பேர் போட்டியாளர் பட்டியலில் இடம் பிடித்தனர் எனினும் மூவர் போட்டியில் இருந்து தாமாகவே விலகிக்கொண்டனர்.
இதேவேளை பிரெக்ஸிற் ஒப்பந்தத்தில் மீண்டும் மாற்றம் எதனையும் மேற்கொள்ளமுடியாது என ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதான பேச்சுவார்த்தையாளர் மைக்கேல் பார்னியர் குறிப்பிட்டுள்ளார்.