LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Tuesday, June 4, 2019

அடுத்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை – ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு

இந்த வருட இறுதியில் நடைபெறவுள்ள ஜனா
திபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லையென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இது குறித்த அறிவிப்பினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வெளியிட்டுள்ளார்.

அத்தோடு மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை ஆதரிக்கப்போவதில்லை எனவும் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு இடம்பெற்ற ஆட்சி கவிழ்ப்பு சதி முயற்சி மற்றும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை அடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது பலதரப்பட்ட விமர்சங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் கடந்த வார இறுதியில் புது டெல்லியில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து தீர்மானிக்கவில்லை என மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார்.

இருப்பினும் நேற்றைய தினம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவையும் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவையும் முன்மொழிந்திருந்தது. இருப்பினும் இது குறித்த முடிவினை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட பொதுஜன பெரமுன சார்பாக கோட்டபாய ராஜபக்ஷவை களமிறக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. இந்த நிலையில் மைத்திரி தற்போது திட்டவட்டமாக தனது முடிவினை அறிவித்துள்ளார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7