LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, June 14, 2019

பயங்கரவாதத்தின் கோர முகத்தை இலங்கையில் கண்டேன் – மோடி

பயங்கரவாதத்தின் கோர முகத்தை இலங்கையில் கண்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அத்துடன், பயங்கரவாதம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்ட ஒரு சமுதாயம் உருவாக இந்தியா எப்போதுமே முன்னுரிமை அளித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கு மோடி விஜயம் செய்ததுடன், ஈஸ்டர் தினத்தன்று குண்டுத் தாக்குதலுக்கு உள்ளான அந்தோனியார் தேவாலயத்தையும் பார்வையிட்டிருந்தார்.

இந்நிலையில், கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகரான பிஷ்கெக் நகரில் ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் இருநாள் மாநாடு இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகியுள்ள நிலையில், அங்கு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் தெரிவிக்கையில், “பயங்கரவாத தீமைகளில் இருந்து மக்களை காப்பாற்ற ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உள்ள நாடுகள் ஒன்றுபட்டு செயலாற்ற வேண்டியது அவசியமாகும்.

பயங்கரவாதம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்ட ஒரு சமுதாயம் உருவாக இந்தியா எப்போதுமே முன்னுரிமை அளித்து வருகின்றது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கு சென்றிருந்தபோது கொழும்பு நகரில் உள்ள அந்தோனியார் தேவாலயத்தில் அப்பாவி மக்களின் உயிர்களை கொத்துக்கொத்தாக கொன்று குவித்த பயங்கரவாதத்தின் கோரமுகத்தை என்னால் காணமுடிந்தது.

எனவே, இவ்வாறு பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும், துணைபுரியும் மற்றும் நிதியளித்து ஆதரிக்கும் நாடுகள் மீது நடவடிக்கை எடுக்க ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பிராந்திய பயங்கரவாத ஒழிப்பு பிரிவு அக்கறை காட்ட வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7