ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தஜிகிஸ்தான் நாட்டின் ஜனாதிபதியை இன்று (வெள்ளிக்கிழமை) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் தஜிகிஸ்தான் ஜனாதிபதி எமோமலி ரஹ்மான் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு துஷான்பே ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.
பிஷ்சேக்கில் ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு இடம்பெற்று வருகின்றது. இதில் பங்கேற்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட்ட குழுவினர் அங்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், இரு நாடுகளுக்குமிடையிலான இராஜதந்திர உறவுகள் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் பேசியுள்ளமை குறிப்பிடத்தக்கது.