நாட்டில் அடிப்படைவாதத்தை தோற்கடிப்பதற்கும், வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கும் பௌத்த, இந்து மக்கள் சகோதரத்துவத்துடன் செயற்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வவுனியாவில் இந்து மத குருமார்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் தெரிவிக்கையில், “10 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற யுத்தத்தை மனதிற்கொண்டு பௌத்த, இந்து மக்கள் பிரிவினையுடன் செயற்படக் கூடாது. வடக்கு மற்றும் கிழக்கில் சில இடங்களில் இவ்விரு மதத்தைச் சேர்ந்த மக்களுக்கும் இடையில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காகவே நாம் வவுனியாவிற்கு விஜயம் செய்துள்ளோம்.
நாட்டில் தற்போது இந்து, பௌத்த மக்கள் மத்தியிலும் சில பிரதேசங்களிலும் ஒற்றுமையின்மை ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த சந்தர்ப்பத்தில் இந்து, பௌத்த மக்களின் ஒற்றுமை நாட்டுக்கு அவசியமாகியுள்ளது” என்று அவர் குறிப்பிட்டார்.