
ன்னாள் ஆளுநர்களான ஹிஸ்புல்லாஹ் மற்றும் அசாத் சாலியை கைதுசெய்யுமாறு கோரி நுவரெலியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
அத்துடன் குருணாகல் வைத்தியர் சியாப்தீன் மொஹமட் ஷாபிக்கு தகுந்த தண்டனை வழங்குமாறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இப்போராட்டம் நுவரெலியா நகர மத்தியில் இன்று (சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, எதிர்ப்பு வாசகங்கள் எழுதிய சுலோகங்களை ஏந்தியவாறும், கோசங்களை எழுப்பியவாறும் சுமார் 100இற்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
தேசிய சுதந்திர முன்னணியினால் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாகாணத்தின் முன்னாள் விவசாயத்துறை அமைச்சர் நிமல் பியதிஸ்ஸ, நுவரெலியா பிரதேச சபையின் உப தலைவர் சரத் குமார உட்பட பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
