ந்தனர். நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஜிலின் மாகாணத்தில் ஜிலின் லாங்ஜியாபோ சுரங்கம் தோண்டப்பட்டு வருகின்றது.
அங்கு உள்ளூர் நேரப்படி நேற்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) சுமார் 8 மணியளவில் தொழிலாளர்கள் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த போது சுரங்கத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து வீழ்ந்தது.
இதன்போது உள்ளே இருந்த தொழிலாளர்கள் சிலர் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து மீட்புக்குழுவினர் விரைந்து சென்று, சுரங்க இடிபாடுகளை அகற்றி மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் 9 தொழிலாளர்கள் உயிரிழந்ததுடன், 10 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
