LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, May 26, 2019

ஐ.எஸ்.பயங்கரவாதிகளான பிரான்ஸ் நாட்டினருக்கு ஈராக்கில் மரண தண்டனை

ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் இணைந்திருந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மூவருக்கு ஈராக் நீதிமன்றம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மரண தண்டனை விதித்துள்ளது.
அந்தவகையில், கெவின் கோனோட், லியோனார்ட் லோபெஸ், சலிம் மச்சாவ் ஆகிய மூவருக்கே இவ்வாறு மரணதண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த தீர்ப்புக்கு எதிராக தண்டனை விதிக்கப்பட்டவர்கள் 30 நாட்களுக்குள் மேன்முறையீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி அப்பாவி பொதுமக்களை ஈவிரக்கமின்றி கொன்று குவித்த ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தினர் பலரை அமெரிக்காவின் உதவியுடன் சிரியா அரசு சுட்டுக் கொன்றது. பல பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இப்படி கைது செய்யப்பட்டவர்களில் பலர் அண்டை நாடான ஈராக்கிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இவ்வாறு கடந்த பெப்ரவரி மாதம் சிரியாவால் ஈராக்கிடம் ஒப்படைக்கப்பட்ட சிலரில் 12 பேர் பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு எதிராக பாக்தாத் நகரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் மூவருக்கு மரண தண்டனை விதித்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.



 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7